இலங்கைக்கும் கொரிய குடியரசுக்கும் இடையிலான பொருத்தமான தொழில்நுட்ப அபிவிருத்தி கருத்திட்டம் மிக வெற்றிகரமாக நிறைவடைந்ததை முன்னிட்டு பத்தரமுல்ல வோட்டர்ஸ் எஜ் ஹோட்டலில் 2019.12.10ஆம் திகதி இலங்கைக்கான கொரிய தூதுவர் திரு. லீ ஹியோங அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற நிறைவு வைபவத்தில் தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சர் திலங்க சுமதிபால பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

 

'இலங்கையை தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றமடைந்த நாடாக மாற்றுவதற்கு நிபுணர்களின் அறிவு பயன்படுத்தப்படும்'- அமைச்சர் திலங்க சுமதிபால.

விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் கீழ் தேசிய ஆராய்ச்சி பேரவையினால் (NRC) ஏற்பாடு செய்யப்பட்ட விஞ்ஞான வெளியீடுகளுக்கு ஜனாதிபதி விருது வழங்கும் விழா 2011.09.26 அன்று கொழும்பு தாஜ் சமுத்திர ஹோட்டலில் மாண்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ சுஜீவ சேனசிங்க அவர்களின் பங்றே;புடன் நடைபெற்றது.

விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் கீழ் இலங்கை தரப்படுத்தல் நிறுவகத்தினால் (SLSI) ஒழுங்குசெய்ப்பட்ட 2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளுக்கான அதிசிறப்புக்கான தேசிய தரப்படுத்தல் விருது வழங்கும் விழா தாமரை தடாக தேசி அரங்கத்தில் மாண்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும்; விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ சுஜீவ சேனசிங்க ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது.

நவீன தொழில்நுட்பத்திற்கான ஆர்தர் சி கிளார்க் நிலையத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் பெறுபேறாக, இலங்கை விஞ்ஞானிகள் குழாம் ஒன்று இலங்கை வரலாற்றில் முதல்முறையாக ஒரு புதிய மேலதிக- சூரிய கோள்மண்டல முறைமையைக் (நுஒழிடயநெவள) கண்டுபிடித்துள்ளது.