அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு மற்றும் அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்பு ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்படும் உயர்-எரிசக்தி இயற்பியல் கருவிகளின் கண்டுபிடிப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் பயன்பாடுகள் மீதான தெற்காசிய ஆர்க்கிடெக்சொக் இன்று ருஹுன மற்றும் கொழும்பு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து 20 ஆம் திகதி விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ சுஜீவ சேனசிங்க அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு கௌரவ அமைச்சர் சுஜீவ சேனசிங்க அவர்களின் பங்கேற்பின் கீழ் ஆரம்பிக்கப்படவிருக்கின்ற 'சில்ப சேன' நிகழ்ச்சித்திட்டத்தில் செயலூக்கத்துடன் கலந்துகொள்ளும்படி இலங்கையின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் அழைக்கின்றது.

விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் நிறுவகங்களுக்காக புதிய பிரதானிகளும் சபை உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர்.

விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் என்பவை இணைந்து அபிவிருத்திசெய்த சிட்ரா (Citra) சமூக புத்தாக்க ஆய்வுகூடம், இன்று (13 பெப்ரவரி 2019) கொழும்பில் சுபநேரத்தில் பிரதம அமைச்சர் ரனில் விக்கிரமசிங்க அவர்களால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

shilpa sena12விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சித் துறை மற்றும் பொதுமக்கள் ஆகியவற்றுக்கு இடையில் உள்ள இடைவெளியைக் குறைப்பதற்காகவும், தொழில் நுட்பத்தை மக்களுக்கு கொண்டு வருவதற்காகவும், "ஷில்ப சேனா" திட்டத்தின் செயற்பாட்டு மாதிரியை உருவாக்குவதல் தொடர்பில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது. கௌரவ விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர், செயலாளர் மற்றும் அமைச்சின் உத்தியோகத்தர்கள் மற்றும் இவற்றோடு இணைந்த நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.